ADDED : ஆக 23, 2024 03:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டாக்கா:வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்டையும் அந்நாட்டு இடைக்கால அரசு நிர்வாகம் ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீ்ட்டிற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷே க் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில் ஹசீனாவின் அனைத்து தூதரக பாஸ்போர்ட்களை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்தது. அதுமட்டுமின்றி அவரது அமைச்சரவையில் இருந்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது.

