sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்

/

தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்

தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்

தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார் ஸ்டாலின்

49


UPDATED : ஆக 30, 2024 07:41 AM

ADDED : ஆக 30, 2024 07:28 AM

Google News

UPDATED : ஆக 30, 2024 07:41 AM ADDED : ஆக 30, 2024 07:28 AM

49


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், தமிழில் அவர் பேசியதாவது: மாநாட்டில் கலந்து கொண்ட தொழில் அதிபர்களை வரவேற்கிறேன். 75 ஆண்டுகால அரசியல் இயக்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். இப்போது தமிழகத்தில் 6வது முறையாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறோம்.

2வது இடம்

இந்தியாவில் எங்களது கூட்டணி பல முறை பிரதமர்களை உருவாக்கி, ஆட்சி அமைக்க வைத்திருக்கிறது. தமிழகத்தில் கருணாநிதி 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார். இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் இன்று விளங்கி கொண்டு இருக்கிறது.

வளர்ச்சி மிகுந்த தமிழகம்

அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலம் தமிழகம். இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் 20% தமிழகத்தில் தான் உள்ளன. இந்தியாவின் தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாக கொண்ட மாநிலம் தமிழகம். இந்திய தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 45 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

ஒரு டிரில்லியன் டாலர்


300க்கும் மேற்பட்ட அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது நிறுவனங்களை நிறுவி உள்ளன. சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் 231 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. திறன்களை முன்வைத்து வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

செமி- கண்டக்டர்,

உயர்ந்த மனித வாழ்வியல் கொண்டது அமெரிக்கா என்ற அடிப்படையில், தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிக்க வரும்படி சிவப்பு கம்பளம் விரித்து முதலீட்டாளர்களை வரவேற்கிறது தமிழகம். செமி- கண்டக்டர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் உங்களின் முதலீடுகளை நான் வரவேற்கிறேன்.

வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஏராளமான முன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நோக்கி செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.






      Dinamalar
      Follow us