sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு 3 இந்தியர்களை கைது செய்தது கனடா

/

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு 3 இந்தியர்களை கைது செய்தது கனடா

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு 3 இந்தியர்களை கைது செய்தது கனடா

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு 3 இந்தியர்களை கைது செய்தது கனடா


ADDED : மே 04, 2024 11:24 PM

Google News

ADDED : மே 04, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டவா:காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூன்று இந்தியர்களை கனடா போலீசார் கைது செய்தனர்.

வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், 2023 ஜூன் 18ல், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாள தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உறவில் விரிசல்


இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்லிமென்டில் குற்றம் சாட்டினார்.

இதை திட்டவட்டமாக மறுத்த மத்திய அரசு, 'ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு சுமத்துவதை கனடா நிறுத்த வேண்டும்' என தெரிவித்தது.

இந்த விவகாரத்தால், கனடா - இந்தியா இடையேயான துாதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், ஆல்பர்ட்டா மாகாணத்தின் எட்மன்டன் என்ற பகுதியில் வசிக்கும், இந்தியாவைச் சேர்ந்த கரண் பிரார், 22, கமல்ப்ரீத் சிங், 22, கரன்ப்ரீத் சிங், 28, ஆகிய மூன்று பேரை கனடா போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்களை கைது செய்துள்ளோம். இவர்களுக்கும், இந்திய அரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

மேலும், இந்த மூன்று பேருக்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் தேடி வருகிறோம். விசாரணை நடைபெற்று வருவதால் அனைத்து தகவல்களையும் தற்போது வெளியில் கூற முடியாது. கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குற்றச்சாட்டு


நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து, காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு அமைக்கக் கோரி, சீக்கிய பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் கனடாவில் தங்கியிருந்து, தங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு கனடா அரசு ஆதரவு அளித்து வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us