sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆப்கானிஸ்தான் உடன் மோதல் சிறப்பு துாதரை நீக்கியது பாக்.,

/

ஆப்கானிஸ்தான் உடன் மோதல் சிறப்பு துாதரை நீக்கியது பாக்.,

ஆப்கானிஸ்தான் உடன் மோதல் சிறப்பு துாதரை நீக்கியது பாக்.,

ஆப்கானிஸ்தான் உடன் மோதல் சிறப்பு துாதரை நீக்கியது பாக்.,


ADDED : செப் 15, 2024 11:59 AM

Google News

ADDED : செப் 15, 2024 11:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்:

அரசுக்கு எதிராக மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான சிறப்பு துாதரை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.

அமெரிக்கா - தலிபான் தோஹா ஒப்பந்தத்துக்கு பின், கடந்த 2020ல் அப்போதைய பாக்., பிரதமர் இம்ரான் கானால், ஆப்கானிஸ்தானுக்கான சிறப்பு துாதர் பதவி உருவாக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2021ல் தலிபான் படைகளால் ஆப்கானிஸ்தான் கைப்பற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, 2023ல் ஆப்கன் நாட்டிற்கான சிறப்பு துாதுவராக ஆசிப் துரானியை பாகிஸ்தான் அரசு நியமித்தது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையை தீர்க்கும் விதமாக அவரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கிடையே, தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தாலிபன் பாகிஸ்தான் அமைப்புக்கு, தலிபான்கள் அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறிய பாகிஸ்தான், அது தொடர்பான கண்டனத்தை பதிவு செய்தது.

ஆனால், அவர்கள் அதை மறுத்தனர். இருப்பினும், தெஹ்ரிக் - இ - தலிபான் அமைப்பினரின் தாக்குதல் கடந்த இரு ஆண்டுகளாக பாகிஸ்தானில் அதிகரித்தது.

இந்த விவகாரத்தில், பாக்., அரசின் ஆலோசனைகளை புறக்கணித்து, சொந்தமாக முடிவுகள் எடுத்ததாக ஆசிப் துரானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஆப்கனிஸ்தான் நாட்டுக்கான சிறப்பு துாதர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், ஆசிப் அதை மறுத்துள்ளார். ''சிறப்பு துாதராக பணியாற்ற இன்னும் இரண்டு வருட கால அவகாசம் உள்ளது. இருப்பினும், சொந்த வேலை காரணமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு போகிறேன்,'' என, அவர் தெரிவித்துள்ளார். இவருக்கு முன் இந்த பதவியில் இருந்த முகமது சாதிக்கும், தன் பதவியை கடந்த 2023ல் ராஜினாமா செய்தார்.






      Dinamalar
      Follow us