sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இந்தோனேஷியாவில் 14 பேர் பலி

/

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இந்தோனேஷியாவில் 14 பேர் பலி

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இந்தோனேஷியாவில் 14 பேர் பலி

வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இந்தோனேஷியாவில் 14 பேர் பலி


ADDED : மே 04, 2024 11:24 PM

Google News

ADDED : மே 04, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜகர்த்தா: இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 14 பேர் உயிரிழந்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் கடந்த 3ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் லுாவு மாவட்டத்தில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

இங்குள்ள 13 பிராந்தியங்களில், 10 அடி உயரத்துக்கு சேற்றுடன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 42 வீடுகள் அடியோடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 1,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் ரப்பர் படகுகள் மற்றும் வாகனங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களில் சிக்கி தவித்தவர்களை மீட்டு வருகின்றனர்.

இவர்களில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பில் வசித்தவர்கள் மீட்கப்பட்டு, அங்குள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us