ADDED : மே 07, 2024 08:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலாலம்பூர்: மலேஷியாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.மலேஷியாவில்
கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகனங்கள் மிதக்கின்றன. புயல் காற்று
வீசியதால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேராடு சாய்ந்தன. இதனால் மோனோ
ரயில் சேவையும், சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கனமழைக்கு ஒருவர்
பலியானதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.