sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆப்கானிஸ்தான் நாட்டினர் வெளியேற பாக்., உத்தரவு

/

ஆப்கானிஸ்தான் நாட்டினர் வெளியேற பாக்., உத்தரவு

ஆப்கானிஸ்தான் நாட்டினர் வெளியேற பாக்., உத்தரவு

ஆப்கானிஸ்தான் நாட்டினர் வெளியேற பாக்., உத்தரவு

1


ADDED : மார் 08, 2025 11:52 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:52 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: சட்டவிரோதமாக குடியேறிவர்களை வெளியேற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வரும் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வெளியேற வேண்டும் என, பாகிஸ்தான் அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில், லட்சக்கணக்கான ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பல ஆண்டுகளாக தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் பாகிஸ்தான் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர்.

வேறு நாடுகளுக்கு இடம்பெற முயன்ற பலர், பாகிஸ்தானில் குடியுரிமை இன்றி சட்டவிரோதமாக தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவ., 1ம் தேதி முதல், சட்டவிரோதமாக தங்கி உள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது.

பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்களாகவே வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் சட்ட விரோதமாக தங்கியுள்ள ஆப்கன் நாட்டு மக்கள் தாங்களாகவே வெளியேறுவதற்காக, வரும் 31ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் இந்த அறிவிப்பால், ஆப்கன் நாட்டு குடியுரிமையுடன் வசித்து வரும் எட்டு லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.






      Dinamalar
      Follow us