இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி : தூதர் தகவல்
இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி : தூதர் தகவல்
ADDED : செப் 09, 2024 07:21 PM

கீவ்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ரஷ்யா -உக்ரைன் நாடுகளுக்குபிரதமர் மோடி அரசு முறைப்பயணம் மேற்கொண்டார். உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை. அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது' என, சுட்டிக்காட்டினார்.
உக்ரைன் போரை முடிவுக்கு கெண்டு வருவதற்கான முயற்சியை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள நிலையில் இந்தியாவிற்கான உக்ரைன் தூதரக அதிகாரி ஒலிக்ஸாண்டர் பொலிஷ்செவுக் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஆக. 23-ம் தேதி இந்திய பிரதமர் மோடி உக்ரைன் வருகை தந்தார். அப்போது பரஸ்பரம் நட்புறவு மேம்பட இந்தியா வருமாறு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்தார். அதனை அதிபர் ஏற்றுக்கொண்டார். இந்தாண்டு இறுதியில் அரசு முறைப்பயணமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்தியா வர வாய்ப்புள்ளது என்றார்.