ADDED : செப் 07, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமாபாத்:நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடந்த ஜூன் மாத இறுதியில் துவங்கிய பருவமழை தொடர்கிறது. இதில், பஞ்சாப் மாகாணம் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது.
மொத்தம், 13 கோடி மக்கள் தொகை உள்ள இந்த மாகாணம், கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் இருந்து தொடர்ந்து மழையை சந்தித்து வருகிறது.
இங்கு, ஆக., 23ல் இருந்து இதுவரை, மழை மற்றும் வெள்ளத்துக்கு, 50 பேர் பலியாகி உள்ளனர். மழை வெள்ளத்தில், 3,900 கிராமங்கள் மூழ்கியுள்ளன.
இதனால், 40 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.