sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

1 சென்ட் நாணயம் தயாரிப்பு நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் உத்தரவு

/

1 சென்ட் நாணயம் தயாரிப்பு நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் உத்தரவு

1 சென்ட் நாணயம் தயாரிப்பு நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் உத்தரவு

1 சென்ட் நாணயம் தயாரிப்பு நிறுத்தம்: டொனால்டு டிரம்ப் உத்தரவு

1


UPDATED : பிப் 11, 2025 03:04 AM

ADDED : பிப் 11, 2025 03:02 AM

Google News

UPDATED : பிப் 11, 2025 03:04 AM ADDED : பிப் 11, 2025 03:02 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன் : அமெரிக்காவின் பழமையான மற்றும் குறைந்த மதிப்புள்ள நாணயங்களில் ஒன்றான, 'பென்னி'யின் தயாரிப்பை நிறுத்தும்படி அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற நாளில் இருந்து, அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

அந்த வரிசையில் அந்நாட்டின் மிகவும் பழமையான மற்றும் குறைந்த மதிப்புள்ள, 'பென்னி' என்றழைக்கப்படும், 1 சென்ட் நாணயத்தின் தயாரிப்பை உடனடியாக நிறுத்தும்படி கருவூலத் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் 1 டாலரில், 100ல் ஒரு பங்கு மதிப்புள்ள நாணயம் பென்னி என்று அழைக்கப்படுகிறது.

இந்த 1 சென்ட் நாணயத்தை தயாரிக்க, அரசு 2 சென்ட் செலவிடுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அரசின் வீண் செலவுகளை குறைப்பதற்காக, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு முன் வைத்த பரிந்துரையின் அடிப்படையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2024 நிதியாண்டில் பென்னி தயாரிப்பில் அரசுக்கு 700 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாணய தயாரிப்பு துறை அறிக்கை அளித்து உள்ளது.

ரியல் எஸ்டேட் நகரம் காசா!

மேற்காசிய நாடான பாலஸ் தீனத்தின் காசாவை கைப்பற்றுவோம் எனக் கூறியது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:காசாவை விலைக்கு வாங்கி சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளை இங்கு மீண்டும் குடியேற விடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம். இங்கு எல்லாமே சிதிலமாகிக் கிடக்கின்றன. மீதியிருப்பவையும் இடிக்கப்பட்டு, புதிய நகரத்தை உருவாக்குவோம்.ரியல் எஸ்டேட் தொழிலுக்கு மிகப் பெரிய வாய்ப்புள்ள இடம் காசா. அதை நாங்கள் மெதுவாக கட்டியெழுப்புவோம். காசாவில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனர்களுக்கு பாதுகாப்பான இடம் அளித்தால், அவர்கள் மீண்டும் காசா வர விரும்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us