sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கென்யாவில் அரசுக்கு எதிராக வெடித்தது கிளர்ச்சி : 11 பேர் சுட்டுக் கொலை

/

கென்யாவில் அரசுக்கு எதிராக வெடித்தது கிளர்ச்சி : 11 பேர் சுட்டுக் கொலை

கென்யாவில் அரசுக்கு எதிராக வெடித்தது கிளர்ச்சி : 11 பேர் சுட்டுக் கொலை

கென்யாவில் அரசுக்கு எதிராக வெடித்தது கிளர்ச்சி : 11 பேர் சுட்டுக் கொலை


ADDED : ஜூலை 08, 2025 07:14 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நைரோபி: கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது 11 பேர் சட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

கென்யாவில் 1990ம் ஆண்டு அப்போது சர்வாதிகாரியாக இருந்த அதிபர் டேனியல் அரப் மொய்க்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதே ஆண்டு ஜூலை 7ம் தேதி நிகழ்ந்த போராட்டத்தில் டேனியல் அரப் மொய் ஆட்சி முடிவுக்கு வந்தது.

35 ஆண்டுகள் நிறைவு அடைந்த அப்போராட்டத்தை நினைவு படுத்தும் வகையில் நேற்று கென்ய தலைநகர் நைரோபியில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அந்நாட்டின் தற்போதைய அதிபர் வில்லியல் ரூடோ பதவி விலகுமாறு அவர்கள் முழக்கமிட்டனர்.

பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் முன்னேறவிடாமல் தடுத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. ஒரு கட்டத்தில் போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார், பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து கென்யாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந் நிலையில் உள்துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் கூறி இருப்பதாவது; பாதுகாப்பு படையினர் முழு வீச்சில் உஷாராக இருக்கிறோம். ஊர்வலங்களில் ஊடுருவி, மக்களை குழப்பத்தில் வைத்திருக்கவும் சொத்துகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களையும் கையாள தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் கென்யாவில் அமைதியற்ற சூழல் காணப்படுகிறது. அங்குள்ள பெரும்பாலான கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன. தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதால்,அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us