sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பஸ்; தென் ஆப்ரிக்காவில் 13 பேர் பலி

/

வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பஸ்; தென் ஆப்ரிக்காவில் 13 பேர் பலி

வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பஸ்; தென் ஆப்ரிக்காவில் 13 பேர் பலி

வெள்ளத்தில் சிக்கிய பள்ளி பஸ்; தென் ஆப்ரிக்காவில் 13 பேர் பலி


ADDED : ஜூன் 13, 2025 06:18 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கேப்டவுன்; தென் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பள்ளி பஸ் அடித்துச் செல்லப்பட்டதில், 13 குழந்தைகள் பலியாகினர்.

தென் ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் நிலவி வந்த கடும்பனி மற்றும் கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு கேப் மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிகோலிக்னி கிராமத்தில், பள்ளி பஸ் ஒன்று ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

இதில், பஸ்ஸில் பயணித்த மாணவர்கள் மற்றும் டிரைவர் என 13 பேர் உயிரிழந்தனர். அதேபோல, பிற பகுதிகளில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட விபத்துகளால் மொத்தம் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2022ல், டர்பன் மற்றும் குவாசுலு-நடால் மாகாணத்தில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 400 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us