sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் இஸ்ரேல் வீரர்கள் 21 பேர் பலி

/

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் இஸ்ரேல் வீரர்கள் 21 பேர் பலி

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் இஸ்ரேல் வீரர்கள் 21 பேர் பலி

ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் இஸ்ரேல் வீரர்கள் 21 பேர் பலி


ADDED : ஜன 24, 2024 11:11 PM

Google News

ADDED : ஜன 24, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்:காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 21 இஸ்ரேல் வீரர்கள் பலியாகினர்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான போர், 100 நாட்களை கடந்து நீடித்து வருகிறது.

அப்பாவி பொதுமக்கள் 25,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகளும், ஐ.நா., அமைப்பும் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே நேற்று முன் தினம், காசாவின் மத்திய பகுதியில் உள்ள இரு கட்டங்களை இடிக்க இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வெடி பொருட்களை தயார் செய்தனர். அப்போது, மறைவிடத்தில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத குழுவைச் சேர்ந்த ஒருவர், ராக்கெட் வாயிலாக தாக்குதல் நடத்தினர். இஸ்ரேங் ராணுவத்தினர் தயார் நிலையில் வைத்திருந்த வெடி பொருட்கள் மீது, அந்த ராக்கெட் விழுந்ததில் கட்டடம் தரைமட்டமானது.

இதில், கட்டடத்திற்குள் இருந்த 21 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியாகினர். இதை அந்நாட்டு ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் அதிக அளவில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியானது இதுவே முதல் முறை.

முன்னதாக, ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கும் வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் அரசு அறிவித்திருந்தது.






      Dinamalar
      Follow us