sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

குவைத் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலி 67 பேர் அதிரடியாக கைது

/

குவைத் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலி 67 பேர் அதிரடியாக கைது

குவைத் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலி 67 பேர் அதிரடியாக கைது

குவைத் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலி 67 பேர் அதிரடியாக கைது


ADDED : ஆக 19, 2025 07:25 AM

Google News

ADDED : ஆக 19, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவைத் சிட்டி: மேற்காசிய நாடான குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியான நிலையில், சட்டவிரோத கும்பலைச் சேர்ந்த 67 பேர் கைது செய்யப்பட்டனர்.

முஸ்லிம்கள் நாடான குவைத்தில் மதுபானம் விற்பது, வாங்குவது, வைத்திருப்பது மற்றும் குடிப்பது சட்டப்படி குற்றமாகும். இந்தச் சட்டவிரோதச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அங்கு கள்ளச்சாராய விற்பனை அதிகளவில் நடக்கிறது.

இந்த நிலையில் குவைத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்த, 40 இந்தியர் உட்பட, 160 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர். அவர்களில் 23 பேர் உயிரிழந்தனர்; பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை கும்பலை ஒழிக்க குவைத் அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. ரகசிய சோதனைகள் நடத்தப்பட்டு, கள்ளச்சாராயம் தயாரித்து விற்ற கும்பலைச் சேர்ந்த 67 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளியான வங்கதேச நாட்டைச் சேர்ந்தவரும் சிக்கியுள்ளார்.






      Dinamalar
      Follow us