அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி, 12 பேர் காயம்
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு 4 பேர் பலி, 12 பேர் காயம்
ADDED : அக் 12, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தின் லேலண்ட் நகரில் உள்ள பள்ளி ஒன்றில், உள்ளூர் மக்கள் 'ஹோம்கமிங்' என்ற ஆண்டு விழாவைக் கொண்டாட ஏராளமானோர் கூடியிருந்தனர்.
இதற்காக, அங்கு கால்பந்து போட்டியும் நடத்தப்பட்டது.
நள்ளிரவு போட்டி முடிந்து அனைவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென மர்மநபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி னார்.
இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்த தகவல் தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக 18 வயது இளைஞர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.