sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்

/

மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்

மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்

மேயர் வேட்பாளர் உள்ளிட்ட 4 பேர் சுட்டுக்கொலை:மெக்சிகோவில் பதற்றம்


ADDED : மே 13, 2025 03:12 PM

Google News

ADDED : மே 13, 2025 03:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மெக்சிகோசிட்டி: மெக்சிகோவில் நடந்த தேர்தல் பேரணியில் மேயர் வேட்பாளர் யெசெனியா லாரா மற்றும் அவரது 3 ஆதரவாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மெக்சிகோவில் வெராக்ரூஸில் வரும் ஜூன் 1 ஆம் தேதி தேர்தல் நடப்பதை ஒட்டி, நேற்று முன்தினம் தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மொரோனா கட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் யெசெனியா லாரா மற்றும் 3 ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். அப்போது யெசெனியா மற்றும் 3 ஆதரவாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பேரணி சமூக வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பியதால் துப்பாக்கிச் சூட்டில் இருந்து மக்கள் தப்பி ஓட முயன்றபோது ஏற்பட்ட மோதல் காட்சிகள் மற்றும் ஆன்லைனில் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் தரையில் உடல்கள் இருப்பதைக் காட்டின.

மொரேனா கட்சி வேட்பாளர் யெசெனியா லாரா, துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தனது பிரச்சார நடவடிக்கைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார், அதனுடன் 'இளைஞர்களின் பலம் என்னை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடக்கத் தூண்டும் ஆற்றல்' என்ற தலைப்பில் பதிவு வெளியிட்டிருந்தார்.

ஆதரவாளர்கள் மொரேனா கொடிகளை அசைத்தபடி, மோட்டார் சைக்கிள் ஊர்வலம் சென்ற போது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.

இது குறித்து வெராக்ரூஸின் கவர்னர் ரோசியோ நஹ்லே கூறியதாவது:

டெக்சிஸ்டெபெக்கில் மொரேனா வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்களின் கோழைத்தனமான கொலைக்கு காரணமானவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம்; நான்கு பேர் இறந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாக்குதல் குறித்து மாநில அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று கூறினார்.






      Dinamalar
      Follow us