sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

விமானத்தில் வழங்கிய உணவில் உயிருடன் எலி

/

விமானத்தில் வழங்கிய உணவில் உயிருடன் எலி

விமானத்தில் வழங்கிய உணவில் உயிருடன் எலி

விமானத்தில் வழங்கிய உணவில் உயிருடன் எலி


ADDED : செப் 23, 2024 05:03 AM

Google News

ADDED : செப் 23, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபன்ஹேகன்: நார்வேயில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில், உயிருடன் எலி கிடந்ததால் பயணியர் பீதியடைந்தனர்.

ஐரோப்பிய நாடான நார்வேயின் ஓஷ்லோவில் இருந்து மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாலகாவுக்கு, ஸ்கான்டினேவியன் ஏர்லைன்ஸ் என்ற பயணியர் விமானம் நேற்று சென்றது. நடுவானில் பயணியருக்கு உணவு வழங்கப்பட்டது.

அதில் ஒரு பெண் பயணிக்கு வழங்கப்பட்ட உணவு பாக்சில் இருந்து திடீரென வெளியேறிய எலி, விமானத்திற்குள் குதித்தது. இதனால், பயணியர் அதிர்ச்சியடைந்தனர்; உணவை சாப்பிட மறுத்தனர்.

தப்பிய எலியை தீவிரமாக தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, டென்மார்க்கின் கோபன்ஹேகன் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். பின்னர், அனைத்து பயணியரும் வேறு விமானத்தில் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், உணவில் எலி கிடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரிய விமான நிறுவனம், இதுபோன்ற நிகழ்வு இனி நிகழாது எனவும் உறுதி கூறியுள்ளது. பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி வந்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us