sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அல் - குவைதாவின் மற்றொரு தலைவர் பலி

/

அல் - குவைதாவின் மற்றொரு தலைவர் பலி

அல் - குவைதாவின் மற்றொரு தலைவர் பலி

அல் - குவைதாவின் மற்றொரு தலைவர் பலி


ADDED : ஆக 28, 2011 09:30 PM

Google News

ADDED : ஆக 28, 2011 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன் : அல் - குவைதாவின், செல்வாக்கு மிகுந்த இரண்டாம் நிலைத் தலைவர் அடியா அப்துல் ரகுமான்,40.

இவர், பாகிஸ்தான் எல்லையில், அமெரிக்க விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் பலியானதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. ரகுமானின் மறைவு, அல் - குவைதாவுக்கு, பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமெரிக்க அதிகாரிகள், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கடந்த 22ம் தேதி, பாக்., எல்லையில் நடந்த, ஆளில்லா விமானம் ஒன்றின் குண்டு வீச்சில், ரகுமான் பலியானதாகத் தெரிவித்தனர்.

லிபியாவின் மிஸ்ரட்டா நகரைச் சேர்ந்த ரகுமான், ஒசாமா பின்லாடனின் மறைவுக்குப் பின், அல் - குவைதாவின் செல்வாக்கு மிகுந்த இரண்டாம் நிலைத் தலைவராகவும், அல் - குவைதாவின் தற்போதைய தலைவர் அய்மன் அல் ஜவாஹிரியின் வலது கரமாகவும் செயல்பட்டவர். லிபியா விவகாரத்தில், இவரது பங்கும் இருக்கலாம் என, அமெரிக்கா சந்தேகித்து வந்த நிலையில், இவரது மரணம், அந்நாட்டிற்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.








      Dinamalar
      Follow us