அந்தமான் கடலில் விழுந்தது ஹெலிகாப்டர்; பயணிகள் பத்திரம்
அந்தமான் கடலில் விழுந்தது ஹெலிகாப்டர்; பயணிகள் பத்திரம்
UPDATED : பிப் 24, 2026 04:02 PM
ADDED : பிப் 24, 2026 01:03 PM

ஸ்ரீ விஜயபுரம்: அந்தமானில் பயணிகள், ஊழியர்கள் என 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது; பயணித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அந்தமானில் ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவுக்கு செல்வதற்கு மத்திய பொதுத்துறை நிறுவனமான பவன் ஹன்ஸ் சார்பில் சுற்றுலா ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.
இப்படி இன்று காலை 9:30 மணிக்கு ஸ்ரீ விஜயபுரத்தில் இருந்து (போர்ட் பிளேர்) பயணிகள் 5 பேர், பைலட்டுகள் இருவர் என 7 பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர், மாயாபந்தர் அருகே கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்தது.
இதில், பயணிகள், பைலட் உள்ளிட்ட அனைவரும் நடுக்கடலில் விழுந்து தத்தளித்தனர். தகவல் கிடைத்த சில நிமிடங்களில் அங்கு சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர், உடனடியாக அனைவரையும் மீட்டனர். அவர்களுக்கு முதலுதவியும் அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

