ஏப்ரல் 24 ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா தினம்; பிரகடனம் செய்தது நியூயார்க் நகரம்!
ஏப்ரல் 24 ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா தினம்; பிரகடனம் செய்தது நியூயார்க் நகரம்!
UPDATED : ஏப் 24, 2025 03:48 AM
ADDED : ஏப் 23, 2025 10:26 PM

நியூயார்க்:பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் உலகளாவிய சேவை, சமுதாய நலப்பணிகள், கருணை, அமைதிப் பணிகளை கவுரவிக்கும் வகையில், நியூயார்க் நகரம் சிறப்பு பிரகடனம் வெளியிட்டுள்ளது.
![]() |
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆதம்ஸ், ஏப்ரல் 24ம் தேதியை ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு கொண்டாட்ட தினமாக பிரகடனம் செய்தார்.
பிரகடன அறிவிப்பை, மேயர் அலுவலக பிரதிநிதிகள் முன்னிலையில் துணை கமிஷனர் திலீப் சவுகான் வெளியிட்டார்.
![]() |
இதன் மூலம் உலக அளவில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்ட முதல் அரசு கவுன்சில் நிர்வாகம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.இந்த நிகழ்ச்சியில் சத்ய சாய் குளோபல் கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
![]() |
ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகர், அறிக்கை வாசித்தார்.
![]() |
மனிதாபிமான அடிப்படையில் உலகம் முழுவதும் ஸ்ரீ சத்ய சாய் பக்தர்கள் மேற்கொண்ட நற்பணிகள் குறித்து இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது.