sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!

/

அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!

அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!

அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!

5


UPDATED : ஜூன் 14, 2025 09:52 PM

ADDED : ஜூன் 14, 2025 09:50 PM

Google News

UPDATED : ஜூன் 14, 2025 09:52 PM ADDED : ஜூன் 14, 2025 09:50 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின், மினசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர். போலீஸ் வேடமடைந்து வந்த, மர்மநபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மற்றொரு சட்டசபை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் பலத்த காயம் அடைந்தார். இவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.


இது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப். பி. ஐ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தாக்குதல் நடத்தியவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

அதிபர் கண்டனம்

மினசோட்டாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், 'இது போன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது', என்றார்.



'மினசோட்டாவில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நிற்க வேண்டும். இந்த தாக்குதல் நடத்தியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கவர்னர் டிம். வால்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us