sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: ஆட்சியை பிடித்தது ராணுவம்

/

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: ஆட்சியை பிடித்தது ராணுவம்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: ஆட்சியை பிடித்தது ராணுவம்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: ஆட்சியை பிடித்தது ராணுவம்

27


UPDATED : ஆக 05, 2024 05:55 PM

ADDED : ஆக 05, 2024 03:10 PM

Google News

UPDATED : ஆக 05, 2024 05:55 PM ADDED : ஆக 05, 2024 03:10 PM

27


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இங்கு ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் நடந்த வன்முறையில் பலர் பலியாயினர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி வந்தனர்.

வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

பள்ளி, கல்லூரிகள் மூடல்

அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடந்த வன்முறையில் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர், டாக்காவை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

முற்றுகை


பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வன்முறை வெடித்ததும், பிரதமர் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். தற்போது அவர் எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை. டாக்காவில் நிலைமை பதற்றமாக உள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சூறை

Image 1303604பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்த வன்முறையாளர்கள், வீட்டை சூறையாடியதுடன், அங்கிருந்த பொருட்களை தூக்கி சென்றனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

சிலை உடைப்பு


ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் வெற்றி பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்நாட்டின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரஹ்மானின் சிலைகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். இவரின் மகள் தான் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் தீவிர கண்காணிப்பு


ஷேக் ஹசீனா பதவி விலகி உள்ள நிலையில், வங்க தேச எல்லையை ஒட்டிய பகுதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us