sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை

/

உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை

உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை

உக்ரைனை ஐ.நா., கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்; ரஷ்ய அதிபர் புடின் யோசனை

3


ADDED : மார் 29, 2025 09:16 AM

Google News

ADDED : மார் 29, 2025 09:16 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: உக்ரைனை தற்காலிகமாக ஐ.நா.,வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து திறமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: உக்ரைனை தற்காலிகமாக ஐ.நா.,வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மிகவும் திறமையான அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் இது பற்றி விவாதிக்க முடியும். இது ஜனநாயக தேர்தல்களை நடத்துவதற்கும், மக்களால் நம்பப்படும் ஒரு திறமையான அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கும், பின்னர் ஒரு சமாதான ஒப்பந்தம் குறித்து பேசுவதற்கும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் உதவும்.

தேர்தல் நடத்தப்படாத நிலையில் தற்போதைய உக்ரைன் அதிகாரிகள் அனைவரும் சட்டவிரோதமானவர்கள் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். புடினின் கருத்துகளுக்கு பதிலளித்த ஜெலன்ஸ்கியின் தலைமை தளபதி ஆண்ட்ரி யெர்மக் கூறியதாவது: ரஷ்யா அமைதியை நோக்கிய நகர்வுகளைத் தடுக்க முயற்சி நடக்கிறது. போரை தொடர முயற்சி நடக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறியதாவது: உக்ரைனில் ஆட்சி அரசியலமைப்பு மற்றும் மக்களால் தீர்மானிக்கப்படுகிறது என பதில் அளித்துள்ளார்.






      Dinamalar
      Follow us