காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை; கனடா விசாரணை ஆணையம் அறிவிப்பு
காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை; கனடா விசாரணை ஆணையம் அறிவிப்பு
ADDED : ஜன 29, 2025 10:31 PM

ஒட்டாவா: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் எந்தவொரு வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்று கனடா அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே என்ற பகுதியில், 2023 ஜூன் 18ல் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தால், கனடா - இந்தியா இடையேயான துாதரக உறவில் விரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, தூதரை இந்தியா திரும்பப் பெற்ற நிலையில், இந்திய தூதரக அதிகாரிகளை கனடா அரசு வெளியேற்றியது. இது இருநாடுகளிடையே மேலும் மோதலை உண்டாக்கியது.
இந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை வழக்கில் எந்தவொரு வெளிநாட்டுக்கும் தொடர்பில்லை என்று கனடா விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், 'ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதைத் தொடர்ந்து, போலியான தகவல்கள் பரப்பப்பட்டு விட்டன. நிஜ்ஜார் கொலை வழக்கில் எந்த வெளிநாடுகளுக்கும் தொடர்பில்லை,' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.