sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி தல்லாவை கைது செய்த கனடா போலீசார்

/

இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி தல்லாவை கைது செய்த கனடா போலீசார்

இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி தல்லாவை கைது செய்த கனடா போலீசார்

இந்தியாவால் தேடப்பட்ட பயங்கரவாதி தல்லாவை கைது செய்த கனடா போலீசார்


ADDED : நவ 11, 2024 12:45 AM

Google News

ADDED : நவ 11, 2024 12:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டொரான்டோ: மத்திய அரசால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ஷ்தீப் சிங் என்கிற ஹர்ஷ் தல்லா என்பவரை கனடா போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட அமெரிக்க நாடான கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஆண்டு மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.

குற்றச்சாட்டு


இதில் மத்திய அரசுக்கு தொடர்பிருப்பதாக கனடா அரசு குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி கனடாவில் ஒன்டாரியோ மாகாணத்தின் மில்டன் நகரில், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு நபர்கள் மோதிக் கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த விவகாரத்தில், இருவரையும் அம்மாகாண போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, கைதான நபர்களில் ஒருவர், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹர்ஷ்தீப் சிங் என்கிற ஹர்ஷ் தல்லா என தகவல் வெளியாகி உள்ளது.

காலிஸ்தானி புலிகள் படை என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவராக உள்ள இவர், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் நெருங்கிய உதவியாளராக இருந்தார்.

நிஜ்ஜார் மறைவுக்குபின், அந்த அமைப்புக்கு தலைமை ஏற்று வழிநடத்தி வந்தார்.

ஹர்ஷ் தல்லா மீது கொலை, ஆட்கடத்தல், பணம் கேட்டு மிரட்டல், பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி, ஆயுத கடத்தல் போன்ற ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஆண்டு ஜனவரியில், இவரை தேடப்படும் குற்றவாளியாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்தது.

இதற்கிடையே, ஹர்ஷ் தல்லாவின் கும்பலைச் சேர்ந்த அன்மோல்ப்ரீத் சிங், நவ்ஜோத் சிங் ஆகிய இருவரையும் பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர்.

கனடாவின் டொரான்டோ மாகாணத்திற்கு உட்பட்ட பிராம்ப்டன் பகுதியில் ஹிந்து சபை கோவிலில் கடந்த 4ம் தேதி நடந்த நிகழ்ச்சியில், பங்கேற்க சென்ற பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர்.

விசாரணை


இது தொடர்பாக விசாரணை நடத்திய கனடா போலீசார், தாக்குதல் நடத்திய நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகிறது. இந்நிலையில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இந்தர்ஜித் கோசல், 35, சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

இவர், சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பின் தலைவராக உள்ள குர்பத்வந்த் பன்னுானின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us