sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தேர்தலை சீர்குலைக்க சதி இந்தியா மீது கனடா அபாண்டம்

/

தேர்தலை சீர்குலைக்க சதி இந்தியா மீது கனடா அபாண்டம்

தேர்தலை சீர்குலைக்க சதி இந்தியா மீது கனடா அபாண்டம்

தேர்தலை சீர்குலைக்க சதி இந்தியா மீது கனடா அபாண்டம்


ADDED : பிப் 04, 2024 12:18 AM

Google News

ADDED : பிப் 04, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டாவா: ஏற்கனவே, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மோதல் நிலவும் நிலையில், தேர்தலை சீர்குலைக்கும் வெளிநாட்டு அச்சுறுத்தலாக இந்தியா உள்ளதாக, கனடாவின் பாதுகாப்பு உளவு அமைப்பு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, வட அமெரிக்க நாடான கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கடந்தாண்டு குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கனடாவின் பாதுகாப்பு உளவு சேவை பிரிவு, கடந்தாண்டு அக்டோபரில் அரசுக்கு ரகசிய ஆவணத்தை தாக்கல் செய்தது.

இந்த ஆவணத்தின் ஒரு பகுதி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆவணத்தில், கனடாவில் தேர்தல் நடைமுறைகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக தலையீடு செய்யும் வெளிநாட்டு அச்சுறுத்தலாக இந்தியா உள்ளது என, குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டு இந்தியா மீது வைக்கப்பட்டுள்ளது.

கனடா உளவு அமைப்பின் முந்தைய அறிக்கைகளில், சீனா, ரஷ்யா மீது இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தற்போது இரு தரப்பு உறவுகள் மோசமாக உள்ள நிலையில், இந்தியா மீது இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இது குறித்து, கனடா அரசோ, மத்திய அரசோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.






      Dinamalar
      Follow us