sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மயோட்டி தீவை தாக்கிய சிடோ புயல்: 11 பேர் பலி

/

மயோட்டி தீவை தாக்கிய சிடோ புயல்: 11 பேர் பலி

மயோட்டி தீவை தாக்கிய சிடோ புயல்: 11 பேர் பலி

மயோட்டி தீவை தாக்கிய சிடோ புயல்: 11 பேர் பலி


ADDED : டிச 15, 2024 07:07 PM

Google News

ADDED : டிச 15, 2024 07:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட மயோட்டி தீவுகளில், சிடோ புயல் தாக்கியதில், 11 பேர் பலியாகினர்.

ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவுக்கு அருகே, இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ளது மயோட்டி தீவு. பிரான்ஸ் நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட இந்த தீவில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

இந்த தீவை, நேற்று 'சிடோ' என்று பெயரிடப்பட்ட புயல் தாக்கியது. இதில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 11 பேர் பலியாகியுள்ளனர்.

புயல் பாதிப்பு குறித்து பிரான்ஸ் வானிலை ஆய்வு மையமான மெட்டியோ அதிகாரிகள் கூறியதாவது:

மயோட்டி தீவில் 200.கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் தாக்கியது. கடந்த 90 ஆண்டுகளில், இந்த புயல்தான் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும்.

உணவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. வீடுகள் ,அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் தரைமட்டமாகி பலத்த சேதம் அடைந்துள்ளன.

இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.

பிரதமர் பிராங்கோயிஸ் பெய்ரூ கூறுகையில், ''எதிர்பாராத நிலையில், சிடோ புயல் தாக்கிவிட்டது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மயோட்டியை தாக்கிய புயல், இன்று மொஸாம்பிக் வடபகுதியான கேபோ டெல்கடோ அல்லது நம்புலா பகுதிகளை தாக்கும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us