sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்த சட்டத்தை இங்கேயும் கொண்டு வாங்க ஆபீசர்: வடகொரியாவில் கடமையை செய்யாட்டி மரண தண்டனையாம்!

/

இந்த சட்டத்தை இங்கேயும் கொண்டு வாங்க ஆபீசர்: வடகொரியாவில் கடமையை செய்யாட்டி மரண தண்டனையாம்!

இந்த சட்டத்தை இங்கேயும் கொண்டு வாங்க ஆபீசர்: வடகொரியாவில் கடமையை செய்யாட்டி மரண தண்டனையாம்!

இந்த சட்டத்தை இங்கேயும் கொண்டு வாங்க ஆபீசர்: வடகொரியாவில் கடமையை செய்யாட்டி மரண தண்டனையாம்!

9


ADDED : செப் 04, 2024 12:40 PM

Google News

ADDED : செப் 04, 2024 12:40 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சியோல்: வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவை கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு மர்மங்களை கொண்டதாக அந்நாடு உள்ளது. அங்கு நடக்கும் விஷயங்கள் வெளியில் தெரிவதில்லை. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்து தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகிறார். உலக நாடுகளின் மிரட்டலை அவர் கண்டு கொள்வதில்லை.

கடந்த ஜூலை மாதம் பலத்த மழை காரணமாக அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.15 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். அயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்து உள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார்.

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். அவர்கள் கடமையை சரியாக செய்யாததால், பேரிழப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி கிம்ஜாங் உன் உத்தரவிட்டார். இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உட்பட 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தண்டனை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டாலும், அது குறித்த தகவல் தற்போது தான் வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us