sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மனித உடலில் கண்டறியப்பட்ட சதை உண்ணும் ஒட்டுண்ணி

/

மனித உடலில் கண்டறியப்பட்ட சதை உண்ணும் ஒட்டுண்ணி

மனித உடலில் கண்டறியப்பட்ட சதை உண்ணும் ஒட்டுண்ணி

மனித உடலில் கண்டறியப்பட்ட சதை உண்ணும் ஒட்டுண்ணி


ADDED : ஆக 26, 2025 06:57 AM

Google News

ADDED : ஆக 26, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்; மனிதர்களின் சதையை உண்ணும் 'ஸ்க்ரூவோர்ம்' என்ற ஒட்டுண்ணி அமெரிக்காவில் ஒருவருக்கு தொற்றியுள்ளதை அந்நாட்டு சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

'ஸ்க்ரூவோர்ம்கள்' அல்லது சதை உண்ணும் திருகுப்புழுக்கள் என்பவை ஒருவித ஒட்டுண்ணி ஈக்கள். இதில் பெண் ஈக்கள் கால்நடைகள், காட்டு விலங்குகளில் ஏற்படும் காயங்களில் முட்டையிடுகின்றன.

முட்டைகள் பொரித்தவுடன், நுாற்றுக்கணக்கான திருகுப்புழு லார்வாக்கள் தங்கள் கூர்மையான வாய்களை பயன்படுத்தி, விலங்கின் காயங்களுக்குள்ளும் சென்று, உயிருள்ள சதையைத் துளையிட்டு உண்ணும்.

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட கால் நடையோ, விலங்கோ உயிரிழக்க நேரிடும். ஆனால் இந்த சதை உண்ணும் ஒட்டுண்ணி மனிதர்களிடத்தில் காணப்படுவது அரிது.

இந்த நிலையில் முதல்முறையாக, அமெரிக்காவின் மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நியூயார்க்கில் உள்ள ஒருவரிடம், இந்த ஒட்டுண்ணியைக் கண்டறிந்துள்ளது. அவர், எல் சால்வடாரில் இருந்து திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1960களில் உள்நாட்டில் ஒழிக்கப்பட்ட இந்த ஒட்டுண்ணி, தற்போது மத்திய அமெரிக்காவிலிருந்து வடக்கே நகர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us