sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஹசாரே ஆதரவாளர்கள் துபாயில் கைது

/

ஹசாரே ஆதரவாளர்கள் துபாயில் கைது

ஹசாரே ஆதரவாளர்கள் துபாயில் கைது

ஹசாரே ஆதரவாளர்கள் துபாயில் கைது


ADDED : ஆக 24, 2011 12:34 AM

Google News

ADDED : ஆக 24, 2011 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : இந்தியாவில், ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தை ஆதரித்து, துபாயில் ஊர்வலம் சென்ற எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஊழலை எதிர்க்கும் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, துபாயில் கடந்த 20ம் தேதியன்று, அனுமதியின்றி ஊர்வலமாகச் சென்ற ஐந்து இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 22ம் தேதியன்று, அல்மாம்சார் கடற்கரையில் 150 பேர் ஒன்று கூடியிருந்தனர். இவர்கள் கைகளில் இந்தியக் கொடிகளையும், பதாகைகளையும் தாங்கி, அன்னா ஹசாரேக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி, ஊர்வலம் செல்ல முயன்றனர். அப்போது, அங்கு வந்த துபாய் போலீசார், கூட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ள தலைவர்கள் மட்டும் ஊர்வலமாகச் செல்லும்படியும், மற்றவர்கள் இந்த இடத்திலிருந்து சென்று விட வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து, ஊர்வலம் சென்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். அனுமதியில்லாமல், சட்ட விரோதமாக ஊர்வலம் செல்ல முயன்றதாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.






      Dinamalar
      Follow us