sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: அதிபர் டிரம்ப் மீண்டும் கண்டனம்

/

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: அதிபர் டிரம்ப் மீண்டும் கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: அதிபர் டிரம்ப் மீண்டும் கண்டனம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: அதிபர் டிரம்ப் மீண்டும் கண்டனம்

4


ADDED : ஏப் 26, 2025 07:03 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 07:03 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: '' காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, நிருபர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மிகவும் மோசமான ஒன்று. இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்னையை தீர்த்துக்கொள்ளும். நான் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே, பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய, டொனால்டு டிரம்ப் பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். ''கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும்'' என டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

துளசி கபார்ட் கண்டனம்!

அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்ட் கூறியிருப்பதாவது: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், ஹிந்துக்களை குறிவைத்து கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க, இந்தியாவுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம்.

அன்புக்குரியவரை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கொடூரமான தாக்குதலுக்கு காரணமானவர்களை நீங்கள் வேட்டையாடும்போது நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்கு ஆதரவளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us