sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஐ லவ் பாகிஸ்தான் அதிபர் டிரம்ப் அடித்த பல்டி

/

ஐ லவ் பாகிஸ்தான் அதிபர் டிரம்ப் அடித்த பல்டி

ஐ லவ் பாகிஸ்தான் அதிபர் டிரம்ப் அடித்த பல்டி

ஐ லவ் பாகிஸ்தான் அதிபர் டிரம்ப் அடித்த பல்டி

18


UPDATED : ஜூன் 20, 2025 01:37 PM

ADDED : ஜூன் 20, 2025 01:50 AM

Google News

UPDATED : ஜூன் 20, 2025 01:37 PM ADDED : ஜூன் 20, 2025 01:50 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: தன் முந்தைய பதவிக்காலத்தின்போது, பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு, ஏமாற்றக் கூடிய நாடு என்று விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது, 'ஐ லவ் பாகிஸ்தான்' என்று கூறியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது. நான்கு நாட்களில் இந்த மோதல் முடிவுக்கு வந்தது. அப்போது தன் முயற்சியால்தான், இரு நாடுகளும் மோதலை நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால், இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

எனினும், பாகிஸ்தான் அரசோ டிரம்ப் கூறியதை ஆமோதித்தது. மேலும், போரை நிறுத்துவதற்கு காரணமான அவருக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் கூறியது.

இதற்கிடையே, மேற்காசியாவில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் துவங்கியுள்ளது. இதில், இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பாகிஸ்தான் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தது.

மேற்காசியாவில், ஈரான் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அண்டை நாடான பாகிஸ்தானையும் தன் வழிக்கு கொண்டு வருவதற்காகவே, அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்துள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் ஆசிப் முனிருக்கு, டிரம்ப் விருந்தளித்ததாக கூறப்படுகிறது.

விருந்துக்குப் பின் பேட்டியளித்த டிரம்ப், இதை உறுதிபடுத்தும் வகையில் கூறியுள்ளதாவது:

இந்தியா, பாகிஸ்தான் இரண்டும் அணு ஆயுத நாடுகள். ஆனால், போர் நீடிக்காமல் இருக்க இரு நாடுகளும் முன்வந்தன. அதை பாராட்டவே பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு விருந்து அளித்தேன்.

அந்தப் போரை நான் தான் நிறுத்தினேன்; ஐ லவ் பாகிஸ்தான். அதுபோல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மிகச்சிறந்த நபர். அவருடன் நேற்றுதான் பேசினேன். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.

ஈரான் குறித்து மற்ற யாரையும்விட பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும். ஈரானில் நடப்பது குறித்து பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி இல்லை. அதற்காக அவர்கள் இஸ்ரேலுக்கு எதிரானவர்கள் என்று கூற மாட்டேன்.

இரண்டு நாடுகள் குறித்தும் பாகிஸ்தானுக்கு தெரியும். ஈரான் குறித்து அதற்கு நன்கு தெரியும். அங்கு நடப்பது குறித்து நம்மைப் போலவே, பாகிஸ்தானும் அதிருப்தியில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மேற்காசியாவில், அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ளன. இருப்பினும் ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பதை தடுக்கவே, இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் இதற்கு முன்பும் செயல்பட்டுள்ளது. தற்போது தேவைப்பட்டால், பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தலாம் என்பதும் அமெரிக்காவின் திட்டமாக உள்ளது.

கடந்த வாரம் அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு நடந்தது. இதில் பங்கேற்பதற்கு ஆசிம் முனிர் அழைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், இதை அமெரிக்கா மறுத்தது. இந்நிலையில், ஆசிம் முனிருக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விருந்து அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட, பிரதமர், அதிபரைவிட ராணுவ தளபதிக்கே அதிக அதிகாரம் உள்ளது என்பதை இந்த விருந்து சுட்டிக்காட்டியுள்ளது.

நோபல் பரிசுக்கு குறி?

பாகிஸ்தான் ராணுவ தளபதி ஒருவருக்கு அமெரிக்க அதிபர் விருந்து வைப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன், பாகிஸ்தான் ராணுவ தளபதிகளாக இருந்த அயூப் கான், ஜியா உல் ஹக், பர்வேஸ் முஷாரப் ஆகியோருக்கு அமெரிக்க அதிபர்கள் விருந்து கொடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் பாகிஸ்தான் அதிபர்களாக இருந்தபோது, விருந்து வழங்கப்பட்டுள்ளது.ஆசிப் முனிருக்கு டிரம்ப் விருந்து அளித்ததற்கு, மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதை, ஆசிப் முனிரே குறிப்பிட்டுள்ளார். 'இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வந்ததால், டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்' என, அவர் கூறியுள்ளார்.அரசுமுறை பயணமாக, ஆசிப் முனிர் அமெரிக்காவில் இருந்துள்ளார். இந்நிலையில், வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது, வாஷிங்டனுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.ஒரே நேரத்தில் மோடி மற்றும் ஆசிப் முனிருடன் இணைந்து சந்திக்க டிரம்ப் திட்டமிட்டிருந்தார். இதன் வாயிலாக இரு நாட்டுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த முயன்றதற்காக, அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.



அமெரிக்க அதிபர்களாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் - 1906; வூட்ரோ வில்சன் - 1919; ஜிம்மி கார்டர் - 2002; பராக் ஒபாமா - 2009ல் அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ளனர். துணை அதிபராக இருந்த அல் கோர் - 2007ல் பரிசு பெற்றார்.



போரை நான் நிறுத்தவில்லை

முதல் முறையாக ஒப்புதல்பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மே 7ம் தேதி, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் படைகள் தாக்கி அழித்தன. இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. நான்கு நாட்கள் நீடித்த நிலையில், 10ம் தேதி மோதலை நிறுத்திக்கொள்ள இருதரப்பும் முன்வந்தன.ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் இதை அறிவித்தார். தன் முயற்சியால்தான், போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறினார்.இதை, மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. நேற்று முன்தினம், தன்னுடன் தொலைபேசியில் பேசிய டிரம்பிடமும் இதை பிரதமர் மோடி குறிப்பிட்டார்.ஆனால், தன்னால் தான் போர் நின்றதாக, 15 முறை டிரம்ப் கூறியுள்ளார். நேற்று காலையிலும் இதை கூறியிருந்தார்.இந்நிலையில், நேற்று அளித்த பேட்டியில், டிரம்ப் கூறியுள்ளதாவது:பிரதமர் மோடி இங்கு வருவதாக இருந்தது. அவருடன் பேசினேன்; ஆசிப் முனிருடனும் பேசினேன். இரண்டு மிகச்சிறந்த தலைவர்கள் மற்றும் அவர்களுடைய சிறந்த அதிகாரிகள், நல்ல ஒரு முடிவை எடுத்தனர்.இல்லாவிட்டால், அணு ஆயுதப்போர் நடந்திருக்கும். அதை தவிர்க்கும் வகையில், மோதலை நிறுத்த இரு தலைவர்களும் முடிவு எடுத்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.இருநாட்டுத் தலைவர்களே போரை நிறுத்த முடிவு செய்துள்ளதை, டிரம்ப் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.








      Dinamalar
      Follow us