sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

வரிகள் ரொம்பப் பிடிக்கும்; அது அற்புதமான வார்த்தை: டிரம்ப்

/

வரிகள் ரொம்பப் பிடிக்கும்; அது அற்புதமான வார்த்தை: டிரம்ப்

வரிகள் ரொம்பப் பிடிக்கும்; அது அற்புதமான வார்த்தை: டிரம்ப்

வரிகள் ரொம்பப் பிடிக்கும்; அது அற்புதமான வார்த்தை: டிரம்ப்


ADDED : செப் 30, 2025 10:15 PM

Google News

ADDED : செப் 30, 2025 10:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'எனக்கு வரிகள் ரொம்பப் பிடிக்கும். மிக அழகான வார்த்தை. வரி விதிப்பதால் நாங்கள் மிகப்பெரிய பணக்காரர்கள் ஆகியுள்ளோம்' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார். அவர் வரி விதிக்காத துறையே இல்லாத அளவுக்கு அனைத்திற்கும் வரி விதித்துள்ளார். மருந்து பொருட்கள் தொடங்கி சினிமா வரை அனைத்திற்கும் அதிக வரி விதித்து டிரம்ப் அதிரடி காட்டி உள்ளார். இந்த சூழலில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் டிரம்ப, எனக்கு வரிகள் ரொம்ப பிடிக்கும் என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

இது தொடர்பாக நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது: எனக்கு வரிகள் ரொம்பப் பிடிக்கும். மிக அழகான வார்த்தை. வரி விதிப்பதால் நாம் மிகப்பெரிய பணக்காரர்களாகி வருகிறோம். நாம் டிரில்லியன் கணக்கான டாலர்களை ஈட்டினோம். இந்த வரி விதிக்கும் முடிவை நாம் கைவிட்டால் நம்மிடம் இருக்கும் பணம் ஒருபோதும் இருக்காது. மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக நம்மைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இப்போது நாம் அவர்களை நியாயமாக நடத்துகிறோம்.

நான் பதவியேற்றதும் கையெழுத்திட்ட முதல் நிர்வாக உத்தரவுகளில் ஒன்று தகுதியின் கொள்கையை மீட்டெடுப்பது. அதுதான் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பது ஆகும். வரிவிதிப்பு என்ற வார்த்தையை நான் விரும்புகிறேன். வரிவிதிப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தின் முன் ஒரு பெரிய வழக்கு உள்ளது, ஆனால் மற்ற நாடுகள் நமக்குச் செய்தது இதுதான் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. வரிவிதிப்பால் வரும் பணம் நாம் இதுவரை பார்த்திராத ஒன்று. அது நிறைய போர்க்கப்பல்களை வாங்க போதுமானது. இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.






      Dinamalar
      Follow us