sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தற்கொலை செய்துகொண்ட எந்திர மனிதன்!: தென்கொரியாவில் கண்ணீர் அஞ்சலி

/

தற்கொலை செய்துகொண்ட எந்திர மனிதன்!: தென்கொரியாவில் கண்ணீர் அஞ்சலி

தற்கொலை செய்துகொண்ட எந்திர மனிதன்!: தென்கொரியாவில் கண்ணீர் அஞ்சலி

தற்கொலை செய்துகொண்ட எந்திர மனிதன்!: தென்கொரியாவில் கண்ணீர் அஞ்சலி

7


UPDATED : ஜூலை 04, 2024 01:57 PM

ADDED : ஜூலை 04, 2024 01:55 PM

Google News

UPDATED : ஜூலை 04, 2024 01:57 PM ADDED : ஜூலை 04, 2024 01:55 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சியோல்: தென் கொரியாவில் அரசு அலுவலகத்தில் பணியாளராக இருந்த ரோபோ ஒன்று ஓய்வின்றி அதீத வேலையில் ஈடுபட்டதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு 2வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கான படிக்கட்டில் விழுந்து நொறுங்கியது. இது ரோபோவின் தற்கொலையாக பார்க்கப்படுவதாக கூறுகின்றனர்.

தொழில்நுட்பங்களின் வளர்ச்சி சில நேரங்களில் மனிதர்களுக்கு உதவினாலும், மனிதவளத்திற்கு ஆபத்தாகவும் முடிகிறது. தொழில்நுட்பத்தின் அடுத்தப் படிநிலையாக பார்க்கப்படும் ரோபோக்கள் மனிதர்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் செய்யும் வேலைகளை சில நிறுவனங்கள் ரோபோக்கள் மூலம் செய்து, மனிதவள பயன்பாட்டை குறைத்து வருகிறது. அப்படி வேலை செய்யும் ரோபோ மனிதர்களை விட துரிதமாக வேலையை முடித்துவிடுகிறது. இதனால் ரோபோக்கள் ஓய்வில்லாமல் 'உழைத்து' வருகிறது.

அப்படி ஒரு ரோபோ ஓய்வின்றி உழைத்து தற்கொலையே செய்துள்ள நிகழ்வு அரங்கேறியுள்ளது. தென் கொரியாவில் உள்ள குமி நகர சபை அரசு அலுவலகத்தில் ஊழியர்களுக்கு உதவுவதற்காக 'ரோபோ' உருவாக்கப்பட்டது. அரசு ஊழியராகவே பார்க்கப்பட்ட அந்த ரோபோ திடீரென தற்கொலை செய்து கொண்டது அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரோபோ, அந்த அலுவலகத்தின் 2வது தளத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றிச் சுற்றி வந்ததாகவும், மிகவும் குழப்பத்துடன் காணப்பட்டதாகவும் அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் தெரிவித்தனர்.

Image 1289255
பின்னர் 2வது தளத்தில் இருந்து முதல் தளத்திற்கு இறங்கும் படிக்கட்டில் விழுந்து நொறுங்கியுள்ளது. சேதமடைந்த பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஓய்வின்றி அதீத வேலையில் ஈடுபட்டதால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இப்படி நடைபெற்றதால், இது ரோபோவின் தற்கொலையாக பார்க்கப்படுகிறது. அலுவலகத்தில் உள்ளூர் வாசிகளுக்கு உதவி வந்த இந்த ரோபோவின் தற்கொலையால் அங்குள்ளவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

ரோபோவின் பணி

கலிபோர்னியாவில் உள்ள ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோ, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் இந்த அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டது. இந்த ரோபோவுக்கு தென்கொரிய அரசு ஊழியர் என்ற ஐடி கார்டும் இருந்தது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை நேரமாக கொண்ட இந்த ரோபோ, அலுவலகம் வரும் உள்ளூர் வாசிகளிடம் இருந்து தினசரி ஆவணங்களை பெற்று, அதிகாரிகளிடம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தது. இதற்கு முன்பு இருந்த இதுபோன்ற உதவியாளர் ரோபோக்கள் பொதுவாக ஒரு தளத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் இந்த ரோபோ லிப்ட் மூலம் பல தளங்களில் வேலை செய்யுமாம்.








      Dinamalar
      Follow us