sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியா மன்னிப்பு கேட்குமாம்: அமெரிக்க அமைச்சர் ஆணவப்பேச்சு

/

இந்தியா மன்னிப்பு கேட்குமாம்: அமெரிக்க அமைச்சர் ஆணவப்பேச்சு

இந்தியா மன்னிப்பு கேட்குமாம்: அமெரிக்க அமைச்சர் ஆணவப்பேச்சு

இந்தியா மன்னிப்பு கேட்குமாம்: அமெரிக்க அமைச்சர் ஆணவப்பேச்சு

2


ADDED : செப் 06, 2025 07:50 AM

Google News

2

ADDED : செப் 06, 2025 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவிடம் இந்தியா 2 மாதங்களில் மன்னிப்பு கேட்கும் என்று அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் ஆணவாக பேசி இருக்கிறார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதை எதிர்க்கும் அமெரிக்கா, இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதித்து நடைமுறைப்படுத்தி இருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் மிரட்டல், நெருக்கடி உள்ளிட்டவற்றை புறம் தள்ளிய இந்தியா, சீனாவுடன் வர்த்தக உறவை வலுவாக்க தொடங்கி இருக்கிறது.

டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், 7 போர்களை நிறுத்தியதாக உளறித் தள்ளி வருகிறார். அவருக்கு இணையாக தற்போது அந்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஹோவார்ட் லுட்னிக் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சர்ச்சைக் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

வரிவிதிப்பு விவகாரத்தில் ஓரிரு மாதங்களில் அமெரிக்காவிடம் இந்தியா மன்னிப்பு கேட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரும் என்று கூறி உள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் ஹோவார்ட் லுட்னிக் மேலும் கூறியிருப்பதாவது;

அமெரிக்க சந்தை இல்லாமல் இந்தியாவின் வணிகங்கள் செழிக்க முடியாது. அதை இந்தியா உணர்ந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் மன்னிப்பு கோரும். அவர்கள் எந்த பக்கம் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொள்ளும். பிரதமர் மோடியை எப்படி கையாள வேண்டும் என்பதை டிரம்பிடமே நாங்கள் விட்டுவிடுகிறோம்.

சீனர்கள் எங்களிடம் விற்பனை செய்கிறார்கள், இந்தியர்களும் எங்களுக்கும் விற்பனை செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள்ளாக (இந்தியா, சீனா) விற்பனை செய்து கொள்ள முடியாது.

நாங்கள் தான் உலகின் பெரிய நுகர்வோர் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் தான் உலகின் நுகர்வோர் என்பதை உணர வேண்டும்.

இவ்வாறு ஹோவார்டு லுட்னிக் கூறி இருக்கிறார்.

இந்தியா, ரஷ்யா ஆகிய இருநாடுகளையும் இருண்ட தேசமான சீனாவிடம் தொலைத்து விட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புலம்பி உள்ளார். அவரின் புலம்பல் ஒரு பக்கம் இருக்கும் நிலையில், வர்த்தக அமைச்சர் ஹோவார்டு லுட்னிக்கின் இந்த ஆணவ பேச்சு வெளியாகி வந்திருக்கிறது.






      Dinamalar
      Follow us