sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்

/

தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்

தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்

தாய்லாந்து செல்ல வேண்டாம் இந்திய துாதரகம் அறிவுறுத்தல்


ADDED : ஜூலை 26, 2025 06:20 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்காக் : தாய்லாந்து -- கம்போடியா இடையே நடக்கும் மோதலை தொடர்ந்து, 'தாய்லாந்தில் உள்ள ஏழு மாகாணங்களுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம்' என, தாய்லாந்தில் உள்ள இந்திய துாதரகம் அறிவுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்னை உள்ளது. கடந்த மே மாதம் கம்போடியா ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, இரு நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது.

இதையடுத்து, தாய்லாந்து ராணுவம் கம்போடிய பகுதியில் நேற்று முன்தினம் துப்பாக்கி, பீரங்கி, ராக்கெட் தாக்குதல்கள் நடத்தியது.

இரு நாடுகள் இடையேயான மோதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்; 15 ராணுவ வீரர்கள், 30 உள்ளூர்வாசிகள் காயம் அடைந்தனர். தாய்லாந்தில் 50,000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கம்போடியாவில் 4,000க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது குறித்து தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் கூறுகையில், “கம்போடியாவுடனான மோதல் காரணமாக தாய்லாந்துக்குள் ஊடுருவல், ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் மோசமான சூழ்நிலை உள்ளது,” என குறிப்பிட்டிருந்தார்.

தாய்லாந்து - கம்போடியா இடையோன மோதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, தாய்லாந்தில் உள்ள இந்திய துாதரகம் எச்சரிக்கை ஒன்றை நேற்று விடுத்தது.

அதில். 'இரு நாடுகளின் எல்லையில் உள்ள உபோன் ரட்சதானி, சூரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சந்தபுரி மற்றும் டிராட் ஆகிய ஏழு மாகாணங்களில் உள்ள 20 இடங்களுக்கு, இந்தியர்கள் பயணிக்க வேண்டாம்' என, தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us