sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியருக்கு ரூ.240 கோடி பரிசு

/

இந்தியருக்கு ரூ.240 கோடி பரிசு

இந்தியருக்கு ரூ.240 கோடி பரிசு

இந்தியருக்கு ரூ.240 கோடி பரிசு


ADDED : அக் 28, 2025 11:53 PM

Google News

ADDED : அக் 28, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுதாபி:: கேரளாவைச் சேர்ந்த 29 வயது இளைஞர்: கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனில்குமார் பொல்லா, 29, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பொழுதுபோக்கிற்காக லாட்டரி வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்த அனில்குமாருக்கு திடீர் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சின் 'பிக் டிக்கெட்' லாட்டரியில், தானாகவே எண்களின் கலவையை உருவாக்கும் 'ஈஸி பிக்' விருப்பத்தைப் பயன்படுத்தி, வெற்றி டிக்கெட்டை தேர்ந்தெடுத்துள்ளார். அப்போது தனது தாயின் பிறந்த மாதமான நவம்பரை குறிக்கும் வகையில், 11ம் எண் இறுதியாக இருக்கும்படி வைத்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற 23வது அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றிக்கான ஏழு எண்களையும் சரியாக பொருத்தி, ஐக்கிய அரபு எமிரேட்சின் மிகப்பெரிய லாட்டரி பரிசான 100 மில்லியன் திர்ஹாம், அதாவது 240 கோடி ரூபாயை வென்றுள்ளார். மொத்தம் 88 லட்சம் பேர் இந்த லாட்டரியில் பங்கேற்றதில், அவர் வெற்றி பெற்றார்.






      Dinamalar
      Follow us