UPDATED : மார் 05, 2024 10:51 AM
ADDED : மார் 05, 2024 10:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெருசலேம்: கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல்-காசா இடையே போர் நடந்து வருகிறது. போரை நிறுத்தக் கோரி பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், வடக்கு இஸ்ரேலின் மார்காலியோட் பகுதியில் ஒரு விவசாய நிலப் பகுதியில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். இவர்கள் மூவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

