sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்திய பெண்கள் அணி கோல் மழை; தெற்காசிய கால்பந்தில் அசத்தல்

/

இந்திய பெண்கள் அணி கோல் மழை; தெற்காசிய கால்பந்தில் அசத்தல்

இந்திய பெண்கள் அணி கோல் மழை; தெற்காசிய கால்பந்தில் அசத்தல்

இந்திய பெண்கள் அணி கோல் மழை; தெற்காசிய கால்பந்தில் அசத்தல்


ADDED : ஆக 21, 2025 06:52 AM

Google News

ADDED : ஆக 21, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திம்பு : தெற்காசிய கால்பந்து லீக் போட்டியில் கோல் மழை பொழிந்த இந்திய இளம் பெண்கள் அணி, 7-0 என நேபாளத்தை வீழ்த்தியது.

பூடானில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 7வது சீசன் நேற்று துவங்கியது. இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் என 4 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, கோப்பை வெல்லும்.

நேற்று திம்புவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா, நேபாள அணிகள் மோதின. போட்டியின் 16 வது நிமிடத்தில் அப்ஹிஸ்தா இந்திய அணிக்கு முதல் கோல் அடித்தார். 25வது நிமிடத்தில் நிரா சானு, 33 வது நிமிடம் அனுஷ்கா தலா ஒரு கோல் அடித்தனர். 41 வது நிமிடம் மீண்டும் அசத்திய அப்ஹிஸ்தா, இரண்டாவது கோல் அடித்தார். முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில் ஜுலன் (45+1 வது) ஒரு கோல் அடிக்க, இந்தியா 5-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் நிரா (56), அனுஷ்கா (62) தங்கள் பங்கிற்கு மீண்டும் தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில் இந்திய அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நாளை தனது இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை வீழ்த்தியது.






      Dinamalar
      Follow us