sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

'மதவெறி, பயங்கரவாதத்தில் ஊறிப்போன நாடு பாகிஸ்தான்' ஐ.நா.,வில் இந்தியா ஆவேசம்

/

'மதவெறி, பயங்கரவாதத்தில் ஊறிப்போன நாடு பாகிஸ்தான்' ஐ.நா.,வில் இந்தியா ஆவேசம்

'மதவெறி, பயங்கரவாதத்தில் ஊறிப்போன நாடு பாகிஸ்தான்' ஐ.நா.,வில் இந்தியா ஆவேசம்

'மதவெறி, பயங்கரவாதத்தில் ஊறிப்போன நாடு பாகிஸ்தான்' ஐ.நா.,வில் இந்தியா ஆவேசம்

1


ADDED : ஜூலை 24, 2025 03:07 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 03:07 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: 'மதவெறியிலும் பயங்கரவாதத்திலும் ஊறிப்போன நாடாக பாகிஸ்தான் உள்ளது' என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் கூறினார்.

சர்வதேச அளவில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்காக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது.

தற்போது சுழற்சி முறையில் பாகிஸ்தான் இதன் தற்காலிக உறுப்பினராக இந்தாண்டு ஜனவரியில் சேர்க்கப்பட்டது.

அதன் தலைமையில் நேற்று ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், 'அமைதியான தீர்வு முறையில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் விவாதம் நடந்தது.

இதில், ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரீஷ் பேசியதாவது:

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து நாம் விவாதிக்கிறோம். இதற்கு சில அடிப்படைக் கோட்பாடுகள் உள்ளன என்பதை முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதில் ஒன்று தான் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை.

இந்தியத் துணைக் கண்டத்தில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி மாடல்களில் முற்றிலும் முரண்பாடு உள்ளது. இதில், இந்தியா முதிர்ச்சியடைந்த ஜனநாயகம், வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகமாக உள்ளது.

மறுபுறம், பாகிஸ்தான் மதவெறி மற்றும் பயங்கரவாதத்தில் மூழ்கியுள்ளது. சர்வதேச நிதியத்திடமிருந்து தொடர்ச்சியாக கடன் வாங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us