இந்தோனேஷிய எரிமலை வெடிப்பு 10 கி.மீ., உயரத்துக்கு புகைமண்டலம்
இந்தோனேஷிய எரிமலை வெடிப்பு 10 கி.மீ., உயரத்துக்கு புகைமண்டலம்
ADDED : அக் 15, 2025 11:33 PM

ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்து சிதறியதில், ௧0 கி.மீ., உயரத்திற்கு புகைமண்டலமாக காட் சியளித்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், பாலி தீவுக்கு அருகே கிழக்கு நுாசா தெங்காரா மாகாணத்தில் 5, 200 அடி உயரம் கொண்ட லெவோடோபி லகி லகி எரிமலை அமைந்துள்ளது.
செயல்பாட்டில் இருக்கும் இந்த எரிமலையானது சமீப காலமாக அடிக்கடி வெடித்து தீ பிழம்புகளை கக்கி வருகிறது.
கடைசியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இது வெடித்தது. இதனால் அந்த எரிமலைக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்றும் லெவோடோபி லகி லகி எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த வெடி ப்பு, ஒன்பது நிமிடங்கள் நீடித்த நிலையில், 10 கி.மீ., உயரம் வரை எரிமலை சாம்பலுடன் கரும்புகை எழுந்தது.
எரிமலை வெடித்தபின் மழை பெய்தால், சாம்பல் மற்றும் சேறு கலந்து பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே, அருகிலுள்ள கிராமங்களில் வசிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிமலையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வளையம் 7 கி.மீ., சுற்றளவுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் மற்றும் சுற்று லாப் பயணியர் எரிமலையிலிருந்து வில கி இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.