sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

'இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது'

/

'இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது'

'இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது'

'இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது'


ADDED : டிச 06, 2024 02:15 AM

Google News

ADDED : டிச 06, 2024 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோரஷ்யாவின் மாஸ்கோவில் நேற்று நடந்த முதலீட்டு அமைப்பின் கூட்டத்தில், அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்றார். அப்போது, ரஷ்ய தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் இடையே புடின் பேசியதாவது:

நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்கள் அதிகளவில் சந்தைபடுத்தப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளின் பிரபல பிராண்டுகளுக்கு போட்டி போடும் வகையில் இந்த பொருட்கள் உள்ளன. இந்தியாவில், 'மேக் இன் இந்தியா' எனப்படும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தை, 2014ல் அறிமுகம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அரசின் பல முயற்சிகளால், இந்தியா உற்பத்தி மையமாக மாறி வருகிறது.

இதனால், இந்தியாவில் அன்னிய முதலீடுகள் அதிகளவில் நடக்கின்றன. இந்தியாவில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானது. அதனால், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ரஷ்ய நிறுவனங்கள் தயாராக உள்ளன. இந்தியாவில் தங்களுடைய ஆலைகளை அமைக்க அவை தயாராக உள்ளன. விரைவில் இந்த முயற்சிகள் துவங்கும்.

தொழில்கள் செய்வதற்கான சாதகமான சூழ்நிலையை, இந்திய பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். ரஷ்ய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us