தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/194 ஏவுகணைகள்... 812 டிரோன்கள்... ஈரான் தாக்குதலை முறியடித்தாக யுஏஇ அறிவிப்பு

194 ஏவுகணைகள்... 812 டிரோன்கள்... ஈரான் தாக்குதலை முறியடித்தாக யுஏஇ அறிவிப்பு

194 ஏவுகணைகள்... 812 டிரோன்கள்... ஈரான் தாக்குதலை முறியடித்தாக யுஏஇ அறிவிப்பு


ADDED : மார் 04, 2026 02:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 02:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் இதுவரையில் 1000க்கும் மேற்பட்ட தாக்குதலில் ஈரான் ஈடுபட்டதாகவும், பிராந்திய பாதுகாப்பு கருதி தற்காப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் ஆட்சியாளர் கமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, யுஏஇ, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணு வ தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்திய ஈரான், துபாயில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 194 ஏவுகணைகள் மற்றும் 812 டிரோன்கள் மூலம் சுமார் 1000க்கும் மேற்பட்ட தாக்குதலை ஈரான் நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. மொத்தம் ஏவப்பட்ட 194 ஏவுகணைகளில் 180 ஏவுகணைகள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும், 13 ஏவுகணைகள் கடலில் விழுந்ததாகவும், ஒரு ஏவுகணை பிராந்தியத்தில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அதேபோல, 812 டிரோன்களில் 755 இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது. 57 டிரோன்கள் பிராந்தியத்தில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஈரான் மீதான தாக்குதலுக்கு தனது நிலப்பரப்பையும், வான்வெளியையும் பயன்படுத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள யுஏஇ, ஈரான் தாக்குதலில் இருந்து பிராந்தியத்தை காப்பாற்றத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரான் தொடர்ந்து தாக்கி வருவதால் சர்வதேச கிராமம் இன்றும் மூடப்படுவதாக யுஏஇ அரசு அறிவித்துள்ளது. அதேவேளையில், துபாயில் உள்ள பாதுகாப்பு நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் போட்டோக்களை பகிர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு துபாய் போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us