sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஜி7 அமைப்பு பொறுப்பு ஏற்க வேண்டும்: ஈரான்

/

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஜி7 அமைப்பு பொறுப்பு ஏற்க வேண்டும்: ஈரான்

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஜி7 அமைப்பு பொறுப்பு ஏற்க வேண்டும்: ஈரான்

இஸ்ரேல் தாக்குதலுக்கு ஜி7 அமைப்பு பொறுப்பு ஏற்க வேண்டும்: ஈரான்

2


UPDATED : ஜூன் 18, 2025 11:02 AM

ADDED : ஜூன் 17, 2025 09:55 PM

Google News

UPDATED : ஜூன் 18, 2025 11:02 AM ADDED : ஜூன் 17, 2025 09:55 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: '' இஸ்ரேல் அத்துமீறலுக்கு ஜி7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்,'' என ஈரான் தெரிவித்து உள்ளது.

கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில், மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றம் தணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தன்னை தற்காத்துக் கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு எனக்கூறப்பட்டது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இஸ்ரேலின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு செயலுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 3 நாடுகள் அடங்கிய ஜி 7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பொது மக்களின் வீடுகள், பொதுச் சொத்துகள் மற்றும் அரசு கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளன. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. இந்த கொடூர ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை ஈரான் தற்காத்து கொள்கிறது. இதனைத்தவிர ஈரானுக்கு வேறு வாய்ப்புஏதும் இல்லை. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவு கட்டினால் மட்டுமே இந்த பிராந்தியத்தில் நிலைமை ஸ்திரத்தன்மை பெறும். இவ்வாறு ஈரான் கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us