sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சர்வதேச சட்டத்தை மீறிய செயல்; அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் அணுசக்தி அமைப்பு கண்டனம்

/

சர்வதேச சட்டத்தை மீறிய செயல்; அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் அணுசக்தி அமைப்பு கண்டனம்

சர்வதேச சட்டத்தை மீறிய செயல்; அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் அணுசக்தி அமைப்பு கண்டனம்

சர்வதேச சட்டத்தை மீறிய செயல்; அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் அணுசக்தி அமைப்பு கண்டனம்

9


ADDED : ஜூன் 22, 2025 10:41 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 10:41 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என ஈரானின் அணுசக்தி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கா தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கை: சமீபத்திய நாட்களில் எதிரியின் மிருகத்தனமான தாக்குதல்களைத் தொடர்ந்து, இன்று அதிகாலை நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் பார்டோ ஆகிய 3 அணுசக்தி நிலையங்கள் தாக்குதலுக்கு ஆளாகின.

இது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும். சர்வதேச விதிமுறைகளை மீறும் இந்த நடவடிக்கை, துரதிர்ஷ்டவசமானது. சர்வதேச சமூகம் ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை உறுதிப்படுத்துவதில் ஆதரவளிக்கும்.

தியாகிகளின் ரத்தத்தில் கட்டமைக்கப்பட்ட இந்த தேசிய தொழில்துறையின் வளர்ச்சியை நிறுத்த அனுமதிக்க முடியாது. இந்த அமைப்பு சட்ட நடவடிக்கைகள் உட்பட ஈரான் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us