sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆபத்தா ?

/

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆபத்தா ?

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆபத்தா ?

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆபத்தா ?

22


UPDATED : ஏப் 30, 2024 11:57 PM

ADDED : ஏப் 30, 2024 11:56 PM

Google News

UPDATED : ஏப் 30, 2024 11:57 PM ADDED : ஏப் 30, 2024 11:56 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லண்டன் :'கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு, மிக அரிதாக பக்க விளைவு ஏற்படும்' என, தடுப்பூசியை தயாரித்த, 'ஆஸ்ட்ரா ஜெனேகா' நிறுவனம், பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலின்போது, ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்தது. 'சீரம் இந்தியா' நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதே பெயரில் தடுப்பூசி தயாரித்தது.

51 வழக்குகள்


குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம், நம் நாட்டில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள்

தொடரப்பட்டன.

இந்த வகையில், 51 வழக்குகள் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. மொத்தமாக, தடுப்பூசி நிறுவனம் 1,047 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மனுதாரர்கள் கோரிஉள்ளனர்.

கொரோனா நெருக்கடிக்கு பின் இளைஞர்களிடம் மாரடைப்பு, பக்கவாதம், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.

பக்க விளைவுகள் குறித்து இதுவரை வாய் திறக்காத ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம், தாங்கள் தயாரித்த தடுப்பூசி மருந்தால் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது.

இந்த பாதிப்பு அரிதாக சிலருக்கு ஏற்படலாம் என லண்டன் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், அந்த நிறுவனம் கூறியுள்ளது.டி.டி.எஸ்., எனப்படும் 'த்ரோம்போசிஸ் மற்றும் த்ரோம்போசைடோபினியா சிண்ட்ரோம்' என்ற அந்த நோய் தாக்கினால், மூளை அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதியில் ரத்தம் உறைந்து கட்டியாகிவிடும். ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் குறையலாம்.

அறிகுறி


தீராத தலைவலி, அடிக்கடி வயிற்று வலி, கால்கள் வீங்குவது, மூச்சு விடுவதில் சிரமம், நரம்பியல் பிரச்னை போன்றவை இதற்கான அறிகுறிகளாக கூறப்படுகிறது. இந்த நோயை சுலபமாக கண்டுபிடிக்க முடியாது. மரணத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

'தி டெய்லி டெலிகிராப்' உள்ளிட்ட பத்திரிகைகள் விரிவாக இந்த தகவலை வெளியிட்டதை தொடர்ந்து, கோவிஷீல்டு போட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட சில மாதங்களுக்குள் பக்க விளைவுகள் ஏற்படலாமே தவிர, ஆண்டுகள் கடந்த பின் உண்டாகும் நோய்களை தடுப்பூசியுடன் தொடர்புபடுத்த முடியாது என, சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அச்சம் வேண்டாம்

கொரோனா தடுப்பூசியில் பக்க விளைவுகள் என்பது, தடுப்பூசி போட்ட ஓரிரு மாதங்களில் தென்பட்டிருக்கும். ரத்தம் உறைதல், ரத்த தட்டணுக்கள் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். இந்த வகை பாதிப்பும் அனைவருக்கும் ஏற்பட்டு இருக்காது; ஒரு சிலருக்கு ஏற்பட்டு இருக்கும். தடுப்பூசி போட்டு, ஓரிரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், எவ்வித பக்க விளைவும் தற்போது ஏற்படாது. எனவே, கோவிஷீல்டு போட்டு கொண்டவர்கள் அச்சப்பட வேண்டாம். - சவுமியா சுவாமிநாதன்உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி



சீன விஞ்ஞானி போராட்டம்

கொரோனா வைரஸ் குறித்த மரபணு மாதிரியை முதலில் வெளியிட்டவர், சீனாவை சேர்ந்த பிரபல மருத்துவ நிபுணர் ஜாங்க் யாங்க்ஜென். சமீபத்தில் இவருடைய ஆய்வகத்தை, சீன அரசு மூடி சீல் வைத்தது. இதற்கான காரணம் தெரியவில்லை. அரசின் நடவடிக்கையை கண்டித்து, ஆய்வகம் முன்பு அவர் தர்ணா செய்கிறார். கொரோனா வைரஸ் தொடர்பாக துவக்கத்தில் இருந்தே ரகசியம் காத்து வருகிறது சீனா. விஞ்ஞானிகளையும் கண்காணித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே, இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது.








      Dinamalar
      Follow us