sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஜம்மு காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வரைபடம்; மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்

/

ஜம்மு காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வரைபடம்; மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்

ஜம்மு காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வரைபடம்; மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்

ஜம்மு காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வரைபடம்; மன்னிப்பு கேட்டது இஸ்ரேல்

2


UPDATED : ஜூன் 14, 2025 10:37 AM

ADDED : ஜூன் 14, 2025 10:19 AM

Google News

UPDATED : ஜூன் 14, 2025 10:37 AM ADDED : ஜூன் 14, 2025 10:19 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வரைபடத்தை இஸ்ரேல் வெளியிட்ட நிலையில், தவறை உணர்ந்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு துணை நிற்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இதனிடையே, உலக நாடுகளின் வரைபடத்தை வெளியிட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், 'ஈரான் ஒரு உலகளாவிய அச்சுறுத்தல். இது வெறும் ஒரு தொடக்கம் மட்டுமே. நடவடிக்கை எடுப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை,' எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் பகுதி பாகிஸ்தானுடன் இருப்பதைப் போல குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையான நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ' இது வெறும் பிராந்தியத்தை குறிப்பிடுவதற்காக மட்டுமே இந்த உலக வரைபடம் பகிரப்பட்டுள்ளது. இதில், எல்லைகள் துல்லியமாக காட்டப்படவில்லை. ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லை பிரச்னை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் சில பகுதிகள் பாகிஸ்தான் மற்றும் சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்தியா கூறி வருகிறது.

அண்மையில் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின் போது பேசிய பிரதமர் மோடி, எல்லைகள் ஆக்கிரமிப்பு குறித்து மீண்டும் ஒருமுறை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போதைய சூழலில் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமில்லாதது என்று ஈரான் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us