sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஏழு இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை: காசா பகுதியில் பதட்டம்

/

ஏழு இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை: காசா பகுதியில் பதட்டம்

ஏழு இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை: காசா பகுதியில் பதட்டம்

ஏழு இஸ்ரேலியர்கள் சுட்டுக்கொலை: காசா பகுதியில் பதட்டம்


UPDATED : ஆக 19, 2011 09:35 AM

ADDED : ஆக 19, 2011 07:17 AM

Google News

UPDATED : ஆக 19, 2011 09:35 AM ADDED : ஆக 19, 2011 07:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் நடந்த விமான தாக்குதலில் 6 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடியாக நேற்று தெற்கு இஸ்ரேலில் உள்ள எகிப்து எல்லையில் துப்பாக்கியுடன் புகுந்த ஒருவன் 7 இஸ்ரேலியர்களை கொடூரமாக சுட்டுக்கொன்றான். பழி்க்குபழியாக நடந்த இந்த சம்பவம் மத்திய கிழக்கு நாடுகளின் எல்லைப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் செங்கடல் பகுதியில் இஸ்ரேல்- எகிப்து எல்லையில் உள்ள இலியாட் பகுதி . இப்பகுதி வழியாக பாலஸ்தீனியர்கள் அடிக்கடி ஊடுருவி வருவதாக புகார் எழுந்தது. இதற்கு இஸ்ரேல் , எகிப்தின் புதிய அரசின் மீது கடுமையான குற்றம் சுமத்தி வந்தது.இந்நிலையில் நேற்று பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இதில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிக்குபழியாக நேற்று தெற்கு இஸ்ரேலின் எகிப்து எல்லைப்பகுதியில் பாலைப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம ஆசாமி, சரமாரியாக சுட்டதில் 7 இஸ்ரேலியர்கள் பலியாகினர். பாலஸ்தீனியர்களின் இந்த செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று டி.வி.வாயிலாக பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்தது இல்லை என்றார்.






      Dinamalar
      Follow us