ADDED : ஆக 03, 2011 07:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டோக்கியோ : கடந்த 1945ல் ஜப்பானின் இரு நகரங்கள் மீது அமெரிக்கா நடத்திய அணு குண்டு தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களின் வாக்குமூலங்களை, ஏழு மொழிகளில் மொழியாக்கம் செய்து ஜப்பான் அரசு வெளியிட்டுள்ளது.
வருங்காலத் தலைமுறையினருக்கு, கடந்த காலத்தில் நடந்ததை தெரிவிக்கவும், அணு ஆயுதங்கள் இல்லாத உலகை உருவாக்கவும் இந்த வெளியீடு உதவும் என, ஜப்பான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

