sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி... 24 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் குரலாக ஒலித்த புடின்!

/

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி... 24 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் குரலாக ஒலித்த புடின்!

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி... 24 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் குரலாக ஒலித்த புடின்!

பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி... 24 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் குரலாக ஒலித்த புடின்!


ADDED : டிச 26, 2025 11:17 AM

Google News

ADDED : டிச 26, 2025 11:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாஸ்கோ: அணு ஆயுதங்களை வைத்து பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடந்து வருவதாக, கடந்த 2001ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷிடம், ரஷ்ய அதிபர் புடின் குற்றம்சாட்டியது, 24 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு ஸ்லோவேனியாவில் அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் ரஷ்ய அதிபர் புடினின் தனிப்பட்ட சந்திப்பு குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து, அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு காப்பகம், இருவரின் உரையாடல் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தான் அணுஆயுதங்களை வைத்திருப்பது குறித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் ரஷ்ய அதிபர் புடின் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் பர்வேஷ் முஷாரப்பின் ஆட்சியை, அணு ஆயுதங்களைக் கொண்ட ராணுவ ஆட்சி என்றும் புடின் விமர்சித்துள்ளார்.

புடின் கூறியதாவது; நான் பாகிஸ்தானைப் பற்றி கவலைப்படுகிறேன். அங்கு அணு ஆயுதங்கள் கொண்ட ராணுவ ஆட்சிதான் நடக்கிறது. அது மக்களாட்சி அல்ல. இதனை மேற்கு நாடுகள் கண்டிக்கவில்லை. இதைப் பற்றி பேச வேண்டும். எனக் கூறினார்.

அப்போது, அமெரிக்க - ரஷ்யா மோதல் பெரிய அச்சுறுத்தல் கிடையாது என்று கூறிய அமெரிக்க அதிபர் புஷ்ஷூக்கு பதிலளித்த புடின், 'எனக்குத் தெரியும். நான் அமெரிக்காவை ஒருபோதும் அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. போர் காலத்திலும் கூட, சீனா மற்றும் 50 ஆண்டுகளைப் பற்றி நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாங்கள் கவனமாகக் கண்காணித்து வருகிறோம்,' என்றார்.

சட்டவிரோத அணுஆயுதங்களின் மூலம் பாகிஸ்தான், தங்கள் பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்று நீண்ட காலமாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. இந்த இரு உலகத் தலைவர்களின் உரையாடலின் போது, இந்தியாவின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக, புடின் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us